Friday, June 27, 2008


இருபத்தோராம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலைகளை நிகழ்த்தி சாதனை(?) படைத்த நரேந்தி மோடி தனது மனிதகுல விரோதச் செயலை நிகழ்த்தி சாதனை படைத்தவர். விரல்விட்டு எண்ணக்கூடிய சில சக்தி களைத் தவிர அனைவராலும் வெறுக்கப்பட்ட அந்த மனிதர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராக விஷத்தை கக்கியிருக்கிறார்.

தனது மாநிலத்துக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வில்லை என மத்திய அரசை நோக்கி பாய்ந்து பிராண்டினார். மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றால் மாநில முதலமைச்சர் பொதுவாக என்ன செய்வார்? பகிரங்கமாக வேண்டுகோள் விடுப்பார், தலைநகர் டெல்லிக்குச் செல்வார். பிரதமர், நிதியமைச்சர் மற்றும் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் முதலானோரை சந்திப்பார். தீட்டப்பட வேண்டிய திட்டங்களையும், அதற்குத் தேவையான நிதி குறித்தும் தங்களது கோரிக்கைகளை வைப்பார். இதுவே மாநில முதலமைச்சர்களின் நாகரீகமான நடைமுறை.

ஆனால் இதற்கெல்லாம் மாறாக நாற்சந்தியில் இருந்துகொணடு நாகரீக மற்ற முறையில் இந்திய இறையாண்மைக்கு விரோதமாகவும், தான் வகிக்கும் பதவிக்கு பொருத்தமில்லாத வகையிலும், தான் ஏற்றுக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்திற்கு விரோதமாகவும் பேசினார், அல்ல பிதற்றினார்.

மத்திய அரசு குஜராத் மாநில அரசுக்கு போதுமான நிதி கொடுக்காமல் புறக்கணிப்பதாகவும், மேலும் நிதி கொடுக்காவிட்டால் குஜராத் மாநிலத்திலிருந்து வரிகொடுக்க மாட்டோம் என்றும், மத்திய அரசின் உதவிகள் எங்களுக்குத் தேவையில்லை என்றும், மத்திய அரசின் உதவிகள் பெறாத மாநிலம் என குஜராத்தை அழைக்கட்டும் என்றும் அவர் அதிமேதாவித்தனமாக பேசியுள்ளார்.

மத்திய அரசுக்கு வரிகொடுக்க மாட்டோம் என்று கூறுவது அப்பட்டமான தேசதுரோகச் செயலாகும். நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக கூச்சலிடும் தீவிரவாதிகளின் கூற்றாகவே இது கருதப்படும். இந்திய அரசுக்கு வரிகொடுக்க மாட்டோம் என்றால் இவர் எந்த நாட்டிற்கு வரி செலுத்துவாராம்? இஸ்ரேலுக்கா? அமெரிக்காவுக்கா? நேபாளத்தில் விரட்டப்பட்ட மன்னருக்கா? அல்லது மடங்களுக்கா? என்ன ஒரு மடத்தனமான பேச்சு?

1960களில் காஷ்மீர் மக்களின் மனநிலையை அறிய அவர்களின் அரசியல் அபிலாஷையை அறிய பகிரங்க வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தார் காஷ்மீரிகளின் தலைவர் ஷேக் அப்துல்லாஹ். அப்படி யென்ன அவர் தவறாகப் பேசி விட்டார்? என்றே நடுநிலைவாதிகள் எண்ணினர். ஆனால் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, இதற்காக ஓட்டெடுப்புவிடச் சொல்வதா? என்ற ஆத்திரத்தில் இந்திய அரசுக்கும் காஷ்மீர் சிங்கமான ஷேக் அப்துல்லாஹ்வுக்கும் விளைந்த விவகாரத்தில் ஷேக் அப்துல்லாஹ்வை கொடைக்கானலில் சிறைவைக்கும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்தது.

மோடி தற்போது கூறியிருக்கும் விஷமக்கருத்து நிச்சயம் தேசத்துக்கு ஊறுவிளைவிக்கும் கருத்தாகவே இருக்கிறது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. மோடி கூறிய வெறிக்கருத்து குறித்து பாஜகவினர் யாரும் வாய் திறக்கவில்லை. இவர்கள் தான் தேசப்பற்று குறித்து பெரிதாக பீற்றிக் கொள்வார்கள். கீழே தள்ளிய கழுதை குழிபறித்த கதையாக தற்போது மீண்டும் உச்சக்கட்டமாக தனது உளறலை மோடி தொடர்ந்துள்ளார். நான் கூறியது தேசத்துரோக கருத்துதான் என்றால் என் மீது தேசத்துரோக வழக்கு தொடர முடியுமா? என மத்திய அரசை நோக்கி சவால் விடுத்தார். அதோடு ஒருநாளைக் கூட வீணாக்க வேண்டாம், இன்றே என்னை தூக்கில் போடுங்கள் என்று பகிரங்கமாக பொதுக் கூட்டத்தில் கூறியிருக்கிறார். அவர்கள் என்னை எப்படி தூக்கில் போடுவார்கள்? என்று நையாண்டி வேறு. அப்சல்குருவையே தூக்கில் போட முடியாதவர்கள் என்னையா தூக்கில் போடப் போகிறார்கள்? என்று கிண்டலடித்துள்ளார். மோடி எனும் பதறவைக்கும் பாதகனை இனப்படு கொலைகளின் காலத்திலேயே தண்டித் திருக்க வேண்டும். மலம் சுமப்பதை புண்ணியமாகக் கருதவேண்டும் என்று தனது துருப்பிடித்த நாவினால் கூறிய தைத் தொடர்ந்து நிரூபிப்பது போல் தலித் களை நுழையவிடாமல் விரட்டி யடித்த அவலக் கதைகளை சாதனை சரித்திர மாகக் கொண்டிருக்கும் மோடியை தண்டிக்க மத்திய அரசும், நீதித்துறையும் இனியும் தாமதித்தால் இந்திய ஹிட்லரின் ஆணவத்தை அடக்கமுடியாமல் போய்விடும். மத்திய அரசு தனது ஆண்மையை நிரூபிக்குமா?

source : tmmk

Monday, June 9, 2008

ராமர் பாலம்: ''ஒரு பிடி மண்ணை எடுத்தால் புனிதம் கெட்டுவிடுமா?''- நீதிபதிகள் கேள்வி


ராமர் பாலம் உள்ள இடத்திலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வேறு இடத்தில் வைத்தால் அதன் புனிதம் கெட்டு விடுமா என சேது திட்டத்துக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

25 கிலோ மீட்டர் நீளமான ஒன்று வழிபாட்டு தலமாக இருக்க முடியுமா? என்று ராமர் பாலம் பற்றிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூறியும் ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியும் இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்கத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

அவர்களுடன் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் இதே கோரிக்கையுடன் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீது பல மாதங்களாக விசாரணை நடந்து வருகிறது. கடந்த மே-1ம் தேதி இறுதிக் கட்ட விசாரணை தொடங்கியது. இதை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன், நீதிபதி ஜே.எம்.பன்சால் ஆகியோர் நேற்று(மே-6) மீண்டும் விசாரித்தனர்.

அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சோலி சொராப்ஜி, கே.பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். சொராப்ஜி வாதிடுகையில்,

மக்கள் தாங்கள் கொண்டிருக்கும் மத நம்பிக்கையை தங்களது விருப்பப்படி தொடர்வதற்கும், பிரசாரம் செய்வதற்கும் உரிமை உண்டு. அவர்கள் கொண்டுள்ள எந்தவொரு நம்பிக்கையையும் தடுப்பது அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவை மீறுவதாகும்.

ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா? அது இயற்கையாக உருவானதா? என்பது இதில் முக்கியமல்ல. இந்திய சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் ராமர் பாலம் ராம பிரானால் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் வழிபடும் பகுதியை அழிக்கவோ, இடிக்கவோ முயற்சிப்பது அவர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாகும்.

மேலும் ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா, இல்லையா என்பதை நிரூபிக்க அறிவியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களை ஆராய்வது போன்ற பிரச்சினைகளில் நுழைவது உச்ச நீதிமன்றத்தில் வேலையல்ல என்றார்.

இந்து முன்னணி தலைவர் ராம. கோபாலன் சார்பில் வாதிட்ட பராசரன்,

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மக்களின் மனதில் ஏற்பட்ட காயத்தின் ஆழமான வடு இன்னும் உள்ளது. அந்தக் காயம் ஆறிவிட்டாலும் கூட வடு மறையவில்லை. அதேபோல் ராமர் பாலம் இடிக்கப்பட்டாலும் அது நிரந்தர வடுவை உருவாக்கும் என்றார்.

அப்போது நீதிபதி ரவீந்திரன், நீதிபதி பன்சால் ஆகியோர் குறுக்கிட்டு, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

நாம் பூமித் தாயை வணங்குகிறோம், அதற்காக பூமியை நாம் தொடக் கூடாது என்று அர்த்தமா?. நாம் இமயமலையைக் கூட வணங்குகிறோம். அதற்காக இமயமலையைத் தொடக் கூடாது என்று அர்த்தமாகி விடுமா?.. இதேபோல் மதுராவில் உள்ள கோவர்த்தன மலையை வழிபடுகிறோம். அதற்காக கோவர்த்தன மலையில் எதையுமே செய்யக் கூடாது என்று ஆகிவிடுமா?

மக்கள் புனிதமாகக் கருதுவதால் அங்கு கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ளக் கூடாதா?. 25 கிலோ மீட்டர் நீளமான ஒன்று (ஆதாம் பாலம்) வழிபாட்டு தலமாக இருக்க முடியுமா?.

ராமர் பாலம் உள்ள இடத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வேறு இடத்தில் வைத்தால் அதன் புனிதம் கெட்டு விடுமா? என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் தொடுத்தனர்.

இதற்கு பதிலளித்த பராசரன், இவையெல்லாம் பதில் அளிப்பதற்கு மிகக் கடுமையான கேள்விகள் ஆகும். இந்தக் கேள்விகளுக்கு நீதிபதிகள் கூட பதில் அளிப்பது சிரமம் என்றார்.

சோலி சொராப்ஜி கூறுகையில், மலைகள், நதிகள், மரங்கள் போன்ற உதாரணங்கள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ராமர் பாலம் பற்றியே கவலை கொள்கிறோம் என்றார்.

அப்போது, நாட்டின் வளர்ச்சிப் பணிக்காக 300 மீட்டர் நீள பகுதியை இடிக்க கூடாதா? என்பதை அறிய கோர்ட்டு விரும்புகிறது என நீதிபதிகள் கேட்டதற்கு, இடிக்கக் கூடாது என்று பதில் தந்தார் சொராப்ஜி.

பின்னர் பேசிய பராசரன், 6வது வழித் தடத்தில் அமைந்துள்ள ராமர் பாலத்திற்கு எந்த சேதமும் ஏற்படுத்தாமல் சேது சமுத்திர திட்டத்தை 4வது வழித் தடத்தில் செயல்படுத்த எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றார்.

இதையே சுப்பிரமணியம் சுவாமியும் வலியுறுத்தினார்.

அரசு வழக்கறிஞர் நாரிமன்:

ஆனால், மத்திய அரசின் மூத்த தலைமை வழக்கறிஞர் நாரிமன் வாதாடுகையில்,

4-வது மற்றும் 5-வது வழித் தடத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற இயலாது. சுற்றுப்பாதையில் அமைந்துள்ள அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு சரியான வசதியை ஏற்படுத்த முடியாது என்றார்.

இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் புதன்கிழமைக்கு (மே-7) ஒத்தி வைத்தனர்.


Thanks:Umar Mukthar

'குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் ஹிந்துத்துவ சதி'

பிரபல தலித் சிந்தனைவாதியும் "தலித் வாய்ஸ்" பத்திரிக்கையின் ஆசிரியருமான V.T. இராஜசேகர் அவர்கள், "நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்களை மோசமானவர்களாகவும் தேச விரோதிகளாகவும் சித்தரிக்க ஹிந்துத்துவ இயக்கங்கள் நடத்தும் சதிகளே" என கூறினார். கேரளத்திலிருந்து வெளியாகும் "தேஜஸ்" என்ற தினசரிக்கு அவர் அளித்தப் பேட்டியின் பொழுது இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் நடைபெறும் குண்டு வெடிப்புகளைச் சாக்காகக் கொண்டு எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்கள் எவ்வித ஆதாரங்களும் இன்றி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டபின், வழக்குகள் தொடர்பாக அவர்கள் மீது எவ்வித மேல் விசாரணைகளும் நடைபெறுவது கிடையாது. இதற்குக் காரணம், சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக அவர்களின் விசாரணை நடத்த எவ்வித ஆதாரங்களும் இன்மையே காரணமாகும்.


இந்தியாவை உலுக்கிய பல்வேறு தீவிரவாதத் தாக்குதல் படுகொலை சம்பவங்ககளுக்குப் பின்னணியில் RSS நியமித்த காவல்துறையினரே செயல்பட்டுள்ளனர். ஆனால் ஒரு நாடகம் போன்று பின்னர் அவை அனைத்தும் முஸ்லிம்களின் மீதே சுமத்தப்பட்டன. பாராளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டது RSS-ஐத் தலைமையாகக் கொண்ட ஹிந்துத்துவவாதிகளின் சதியாலோசனை தான் என்பது தெளிவானதாகும். நாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் மேல் சாதியினர் என்று சொல்லிக் கொள்வோரின் விருப்பங்களையும் அவர்களுக்கு விளையும் நன்மைகளையும் கண்டுகொள்ள முடியும்.


நாட்டில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் பல வருடங்களாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதுக்குப் பின்னால் தீவிரவாதி என முத்திரைக் குத்துதல் மிகவும் சாதாரணமாக நடைபெறும் விஷயமாகும். ஆனால் அக்கைதுகளுக்குப் பிறகு அவர்கள் தீவிரவாதிகள் என்பதற்கு ஆதாரமான ஆவணங்கள் எதுவும் நீதிமன்றங்களில் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படுவது கிடையாது. மேல் விசாரணைகளோ ஜாமீனோ இவர்களுக்குக் கிடைப்பதில்லை. நீதிமன்றம் என்பது என்ன என்பதைக் கூட இவர்களில் பலர் இன்று மறந்து போய் விட்டனர். இளைஞர்களை மட்டுமே குறிவைத்து ஆயிரகணக்கானவர்களைச் சிறையிலடைத்தது மூலம், அரசு தெளிவான முஸ்லிம் இன அழிப்பில் ஈடுபடுகின்றது.


அப்துல் நாசர் மஹ்தனி குற்றம் சுமத்தப்பட்டு ஒன்பதரை வருடங்கள் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்குத் தேவையான மருத்துவ உதவி செய்யக்கூட அரசு இயந்திரங்கள் தயாராகவில்லை. ஆனால், இறுதியில் அவர் மீது சுமத்தப்பட்ட அத்தகையக் கடுமையான குற்றங்களுக்கு ஒரு சிறு ஆதாரம் கூட சமர்ப்பிக்க இயலாமல் போனதால் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஒவ்வொரு குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இவரைப் போன்று ஆயிரக்கணக்கான மஹ்தனிகள் பலிகடாக்களாக ஆக்கப்படுகின்றனர்.


சாதி அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு மனித நேயத்திற்கெதிரான பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றிவரும் சனாதனமும் அதற்கு எதிராக இஸ்லாமும் எதிரிகளாக இன்று நிற்கின்றன. சனாதனம் சாதாரண மக்களை அநியாயமாக உறிஞ்சக்கூடியதாகும். ஆனால் அதே சமயம், இஸ்லாம் மனித முன்னேற்றத்திற்குத் தேவையான கொள்கைகளை முன் வைக்கக் கூடியதாகும்.


இன்றைய நாள்வரை இஸ்லாத்தை இல்லாமல் அழித்தொழிப்பதற்குப் மேல்சாதியினர் என்போர் தாழ்த்தப்பட்ட மக்களைத் தான் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் கால ஓட்டத்தில் ஒருநாள் இந்த மேல்சாதி சமூகத்தின் தந்திரங்களைத் தலித்களும் ஆதிவாசிகளும் நிச்சயமாகப் புரிந்துக் கொள்ளவே செய்வர்.


தலித்களையும் மத சிறுபான்மையினரையும் தங்களுக்குள் அடித்துக் கொள்ள வைக்க சனாதனம் அனைத்து வகைகளிலும் முயன்றாலும் இவைகளுக்கிடையிலான ஒற்றுமையில் யாதொரு குறைவும் ஏற்படவில்லை. இவர்கள் ஒற்றுமையுடன் வேலை செய்கின்றனர்; ஒற்றுமையுடனே வாழ்கின்றனர். பரஸ்பரம் அவநம்பிக்கையோ அல்லது தொட்டுப்பழகுவதிலோ எவ்விதப் பிரச்சனையும் இல்லை. கொல்கத்தாவில் மிக அதிகமாக முஸ்லிம்களே வாழ்கின்றனர். எனினும் அங்கு பல்வேறு ஜாதி மக்களுடன் முஸ்லிம்களுக்கு எவ்விதத் தீட்டுப் பிரச்சனையும் இல்லை.


இந்தியாவிற்கு வந்த முஹம்மத் கஜ்னவி, சோமநாதர் ஆலயத்தில் விஸ்வரூபம் எடுத்து நின்ற சமூகப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரவே அதனை அவர் தகர்த்தார். அக்காலத்தில் சோமநாதர் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான அபலைகள் 'தேவதாசிகள்' என்ற பெயரில் இருந்தனர். இதே போன்று ஆலயங்கள் என்ற பெயரில் மூடநம்பிக்கைகள் மற்றும் அநாச்சாரங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்த அநேக ஆயிரம் விபச்சாரக் கூடங்களை அவர் தகர்த்திருந்தால் அது அவருக்கு மிகப்பெரிய வெற்றியாகவே அமைந்திருக்கும்.


வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கப்போவதில்லை. எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவும் செய்யாது. மாநிலம், சாதி அடைப்படையிலான அமைப்புகளுக்கு அதிகாரம் உடைய புதிய அரசியல் கூட்டணிக்கே கேரளம் உட்பட இனி வரும்காலங்களில் முன்னேற்றம் இருக்கும். சமயச்சார்பற்ற கட்சிகள் நிர்ணயிக்கக் கூடிய அரசியல் இனி இந்தியாவில் உருவாகும்.


பாஜக, முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெளிப்படையாகத் தெரியும் எதிரி எனில், காங்கிரஸும் CPM-மும் மறைவான எதிரிகளாகும். மறைவான எதிரிகளே மோசமான எதிரிகளாவர். கேரளத்திலுள்ள பிரபலமான சிறுபான்மையினரான ஈழவ சமூகத்தை மார்க்ஸியமும் பிராமணீயம் என்ற சனாதனமும் ஹைஜாக் செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.