Wednesday, December 17, 2008

ஹிந்துத்துவ தீவிரவாதத்தின் பங்கு சீன பத்திரிகை சந்தேகம்







மும்பை பயங்கரவாதத் தாக்கு தலில் ஹிந்துத்துவ தீவிரவாதம் பங்கு இருக்கலாம் என்ற கருத்தை சீனா வின் முன்னணி செய்தி ஏடான `தி பீப்பிள்ஸ் டெய்லி’ தெரிவித்துள்ளது.
மும்பை பயங்கரம் குறித்து அது வெளியிட்டுள்ள கட்டுரையில், பயங்கர வாதியின் மணிக்கட்டில் காவி கயிறு கட்டியிருக்கிறான். இது ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ். போன்ற இயக்கத்தி னர் கட்டும் கயிறாகும் என அப்பத் திரிகையின் பிரதான கட்டுரையாளர் ரென்யான் குறிப்பிட்டிருக்கிறார்.
பீப்பிள்ஸ் டெய்லி, சீனா கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அதிகாரப்பூர்வ பத்திரிகை என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, September 6, 2008

விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள்!உயிரை உறைய வைத்த ஒரிஸா படுகொலைகள்!!





மீண்டும் பற்றி எரிகிறது. ஆப்பிரிக்காவின் ருவாண்டா போல், 2002ன் குஜராத்தைப் போல் ஓர் பெரு மெடுப்பிலான ஒரு இனப்படு கொலை களுக்கான அசாதாரணமான ஆயத்தங் கள் அதில் தென்பட்டன. ஒரிஸாவின் துயர நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை வெடித்தது. ஃபாதர் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாகக் கொளுத்திக் கொல்லப் பட்ட சம்பவம் என வரலாறு மறக்காத வேதனைச் சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை அரங்கேறியது. மனித சமூகம் நாளும் நேசிக்கும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங் கள் அழிக்கப்பட்டதும் சேவை உள்ளம் கொண்ட கன்னியாஸ்திரிகள் வன்முறை ஹிம்சை போன்றவற்றை கனவிலும் கூட நினைக்காதவர்கள் அவர்களை கொளுத் திக் கொன்ற வேதனையையும் என்ன வென்று சொல்வது?
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான சாமியார் லஷ்மானந்தா சரஸ்வதி என்பவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சாமியாரின் கொலைக்கு யார் காரணம் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தும் கிறித்தவர்கள் தான் இதற்கு காரணம் என கொடூரமாகக் கதை பரப்பி கிறித்தவர்கள் வேட்டையாடப்பட்டனர். ஆகஸ்டு 23க்குப் பிறகு மனித வர லாற்றில் மீண்டும் சில கொடூர நிகழ்வுகள் அரங்கேறின. ஆம்! விஸ்வ ஹிந்து பரிஷத் தனது வெறியாட்டத்தை தொடங்கியது. 23ஆம் தேதி கோத்த குடா என்ற பகுதியில் வேகமாக சென்ற வாகனங்கள் வழி மறிக் கப்பட்டன, கொளுத்தப் பட்டன. வாகன ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்பட்டார். சம்பல் பூரில் உள்ள ஆனந்த பள்ளியில் இரண்டு கன்னியாஸ்திரிகள், ஒரு சிறு சர்ச் எல்லாம் பஸ்பமாக்கப்பட்டன. அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் கன்னியாஸ்திரி கள், கிறிஸ்தவர்கள் அவர்களின் வீடுகள் கடுமையாக தாக்கப்பட்டன. மானாவாரியாக கொளுத்தப்பட்டன.
பிரச்சனைக்குரிய கந்தமால் மாவட் டத்தில் ஒரிஸா மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தும் ஒரு பயனும் விளையவில்லை.
ஆகஸ்டு 25ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்த பந்தை தொடர்ந்து வன்முறை வெடித்தது. முழு அடைப்பின் போது விரும்பத்தகாத சம்பவமாக வன்முறை சம்பவங்கள் சில நடக்கும். ஆனால் வன்முறை வெறியாட் டத்தை நிகழ்த்துவதற்காகவே பந்த் நடத்தியது விஸ்வ ஹிந்து பரிஷத் என நடுநிலையாளர் நினைத்த வண்ணமே அந்த வன்முறைகள் நடந்தேறியன.
கிறித்தவர்களுக்கு எதிராக சர்ச்சை கள் நிகழ்த்தி வந்த வரும் உழைக்கும் மக்கள் சாப்பிடும் மாட்டிறைச்சிக்கு எதிராக அரசியல் நடத்தி வந்த சுவாமி லக்ஷ்மானந்தா கொலையை காரணம் காட்டி இதற்கென காத்திருந்தவர்களைப் போல வெறிகொண்ட விதமாக வேட்டை யாடினர் வி.ஹெ.பியினர்.
ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் தேதி வன்முறை வெறியாட்டத்துக்கு அஞ்சி தேவாலயங்கள் வெறிச்சோடின.
அதே நாளில் கந்த மால் மாவட்டத் தில் சிறுபான்மையினர் மீதான தாக்கு தல்கள் அதிகரித்தன. ஆர்ச் டயோசீசன் ஆஃப் புவனேஸ்வர் அலுவலகம் தாக்கப்பட்டது. ஜான் விகாஸ் என்ற சமூக நல அலுவலகம் இந்த டயோசீ சனுக்கு கீழ் செயல்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்படும் அந்த அலுவலகம் தீக்கிரையானது. சூறையாடப்பட்டது. மூன்று கார்களும், ஆறு இரு சக்கர ஊர்திகளும் கொளுத் தப்பட்டன.
முக்கியமான ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மாலை5 1/2 மணிக்கு இவையனைத்தும் கச்சிதமாக முடிக்கப்பட்டன.
6 மணிக்கு...
அதன்பிறகு திவ்ய ஜோதி பாஸ்ட்ரல் சென்டர் மீது மாலை ஆறு மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. சூறையாடல் நடத்தப்பட்டது. பலிகுடாவில் மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, கன்னி யாஸ்திரிகளின் உறைவிடமும் தாக்கப் பட்டது. கன்ஜம்படி பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயம் தாக்கப் பட்டது. கன்ஜம்டி பகுதியில் உள்ள பிராட்டஸ் தேவாலயம் தாக்கப்பட்டது. சூறையாடப்பட்டது.
6.45 மணி...
பலிகுடா பகுதியில் உள்ள மூன்று பெந்தே கோஸ்தே தேவாலயங்கள் அழிக்கப்பட்டன.
இரவு 7 மணிக்கு..
ரைகியா பகுதியில் தலித் சமூகத் தினருக்கு சொந்தமான 12 கடைகள் சாம்பலாக்கப்பட்டன. விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட அப்பாவி மக்கள் அடர்ந்த காட்டுக்கு சென்றால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற அவல நிலையில் அவர்களுக்கு இருண்ட வாழ்வை அளித்த மாநில அரசை நொந்து கொண்டு இருண்ட காட்டுக் குள் சென்றனர்.
ஆகஸ்ட் 25, 2008...
வன்முறைகள் தொடர்ந்தன. ஒரிசா மாநிலம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர் கள் உச்சகட்ட பீதியில் உறைந்தனர்.
காலை 7 மணி..
புல்பானி சர்ச்சும் அநாதை இல்லங் களும் தாக்கப்பட்டன. சிறிசண்டா எம்.சி சகோதரர் விடுதி என்ற ஆதரவற்றோர் விடுதி தாக்கப்பட்டது. அதிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள் அடித்து விரட்டப்பட்டனர். குஜராத் இனப்படுகொலையின் போது சிறு பான்மை சமூகத்தினர் வேட்டையாடப் பட்ட விவகாரம் நெருஞ்சி முள்ளாய் நாட்டு மக்களின் இதயங்களை நெருடிய போதும் கூட அரசும் காவல்துறையும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரிசாவில் மனித உரிமை மீறல்கள் நடந்தன. சிறுபான்மை யினரின் உயிர்கள் உடமைகள் எவ் வளவு மலிவானது என்பதை விவரித்தது.
10.30 மணி..
பலிகுடாவில் வாழும் கிறித்தவர் களின் வீடுகள் இப்போது தாக்கப்பட்டன. சேதங்கள், உயிர் பலிகள் குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை துல்லியமாகக் கிடைக்கவில்லை.
முற்பகல் 11.30 மணி...
நுஆஷி பகுதியில் உள்ள கிறிஸ்தவர் கள் வாழும் தெரு முழுமையாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. உயிருக்கு அஞ்சி மக்கள் கானகத்திற்கு ஓடினர்.தேவாலயத்தின் சார்பாக நடத்தப் பட்ட மாணவர் விடுதி சரமாரியாக தாக்கப்பட்டது. அதில் இரண்டு மாணவர் களின் தலைப் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.
ஒரு மணி..
ஜமாஜ் பரிச்சா என்ற கிறித்தவரின் வீடு. வாகன ங்கள் தீயிடப் பட்டன. கதவு கள் நெருப்பினால் துண்டு துண்டாக உடைந்தன. கூடியக் கூட்டத்தினரால் அவர் செம்மையாக உதைக்கப்பட்டார்.
தலையில் கடும் காயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக் கிறார். (அவர் சிகிச்சை பெறும் மருத்துவ மனையின் பெயர் ரகசியமாக வைக்கப் பட்டிருக்கிறது) அவரது மனைவி ஹிந்து வாக இருந்தும் அவர் மீது கூடியிருந்த கும்பல் இரக்கம் காட்டவில்லை. அவர் மனைவியும் தாக்கப்பட்டார்.
2 மணி...
கிறிஸ்வர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவதற்காக வன்முறை கும்ப லுக்கு அப்பகுதி பெண்கள் மண்ணெண்ணைய் கேன்களை போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கிறார்கள்.
இந்த வன்முறை கும்பல் செய்த குற்றச் செயலுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 436ன்படி ஏழு வருடம் அதற்கு மேற்பட்ட காலம் சிறையில் தள்ள வேண்டிய அளவு குற்றம் செய்தார் கள். ஆனாலும் துணிச்சலுடன் உலா வருகிறார்கள்.
ஃபாதர் சல்லான் கன்ஜம்டி பாஸ்ட்ரல் சென்டரின் இயக்குநர், அந்த சென்டரின் நிர்வாகி சிஸ்டர் மீனா இருவரோடு சேர்ந்து அந்த அலுவலகங்கள் கொளுத் தப்பட்டன. உள்ளே மாட்டிக் கொண்ட இருவரும் உயிர் பயத்தில் அலறவும் அஞ்சி தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்களும் காட்டுக்குள் ஓடினார்கள்.
சில, இடங்களில் கிறித்தவர்களின் வீடுகளுக்குள் வன்முறை கும்பல் நுழைந்து அங்கு வீட்டுக்குள் இருந்தவர் களை வெளியே இழுத்து வந்து அருகிலுள்ள காவல்நிலையத்துக்கே கொண்டு சென்று உதைத்தனர்.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி பாதிக்கப் பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.
1. விஜய் பரிச்சா2. ஆர்.கே. நாயக்3. ஜோசப் நாயக்4. சூசன் நாயக்5. சந்தோஷ நாயக்6. ஹரி ஹர்தாஸ்7. மோசே நாயக்8. பிரகாஷ் நாயக்9. மோசே நாயக்10. ராஜு மற்றும் பலர்
ரைகியா போலிஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கருணா அநாதை நிலையம்.பத்மஹாவில் உள்ள மூன்று பெந்தோ கோஸ்தே பள்ளி மஸாதிகா சர்ச்பைசர் மஹா சர்ச், மொண்டாகியா பகுதியின் பாப்டிஸ்ட் சர்க் ஆர்.சி.சர்ச்மாத பங்கா சர்ச் வன்முறைகள் தொடர்வதால் இன்றும் ஏராளமான பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கதி குறித்த தகவல் தெரியவில்லை.
பூல்பானி, சரஸ்னந்தா, பேபின்கியா, பலிகுடா மற்றும் கொஞ்சம்ண்டி பகுதி களில் கிறிஸ்தவர்களின் வீடுகள் முற்றி லும் கொளுத்தப்பட்டன. இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் இதனை செய்தியாக மட்டும் வெளியிட்டன. இருந்தும் நாடெங்கும் பரபரப்பு ஏற்பட் டது. கலவரக்காரர்களை சுட உத்தரவிடப் பட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித் தும் கூட வன்முறை ஓயவில்லை.
குழந்தைகளையும் பெண்களையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற செயல் நாடெங்கும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
குழந்தைகளைக் கூட கொலை செய்யும், பெண்களைக் கூட தீயிட்டு கொல்லும் இரக்கமற்ற மிருகத்தனத்தை பல்வேறு இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. சட்டத்தை கையி லெடுத்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் மனித குல விரோதி சக்திகளை வேட்டையாட விட்டு வேடிக்கை பார்த்த ஒரிசா மாநில அரசையும் மத்திய அரசையும் வன்மை யாகக் கண்டிப்பதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி தெரிவித்தார். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் போராட்டங் களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
ஒரிசா மனித வேட்டையை எதிர்த்து உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 16 ஆம் பெனடிக்ட் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். வன்முறைகள் இன்னும் தொடர்கின்றன.
பள்ளிகள், கல்லூரிகள் அடையாள வேலை நிறுத்தம் செய்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின் றன. ஆந்திராவில் ஒரிசா சம்பவத்தில் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து முஸ்லிம் கல்வி நிறுவனங் களும் கதவடைத்தன.
முஸ்லிம் கல்வி சமூக மற்றும் கலாச் சார அமைப்பு, சிறுபான்மை மேம்பாட்டு அமைப்பு, தமீரெ மில்லத், அமாரத் மில்லத் இஸ்லாமியா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் ஒருநாள் வேலை நிறுத்தத்தினை அறிவித்தன.
இன்னமும் ஒரிசாவில் புதுப்புது சாம்பல் மேடுகள் முளைத்து வருவதாக வேதனை தகவல்கள் வேலைக்கொன் றாய் வந்து கொண்டிருக்கின்றன.
ஒரிசாவில் கிளம்பும் தீ ஜுவலை இந்தியாவின் மதசார்பின்மை(!) பெருமைப் பற்றி உரக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

ஒரிஸ்ஸாவில் சங்பரிவார் வெறியாட்டம் தமுமுக கடும் கண்டனம்

தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி பத்திரிக்கைகளுக்கு விடுத்திருக்கும் பத்திரிக்கை அறிக்கை


ஒரிஸ்ஸாவில் கிறித்தவர்களுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் சக்திகள் நடத்தி வரும் வன்முறை வெறியாட்டத்தை தமுமுக வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரிஸ்ஸாவில் உள்ள துமுடி பந்த்கா என்ற இடத்தில் சுவாமி லக்ஸ நந்த சரஸ்வதி உள்ளிட்ட ஐந்து பேர் படுகொலை செய்யப் பட்டது கண்டனத்திற்குரியது.


இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரிஸ்ஸா முழுவதும் வி.ஹெச்.பி தலைமையில் ஹிந்துத்வா சக்திகள் நடத்திவரும் வன்முறை வெறியாட்டம், நமக்கு குஜராத்தை நினைவூட்டுகிறது.


கடந்த 23.08.2008 தேதியிலிருந்தே தொடர்ச்சியாக வன்முறைகள் வெடித்துக் கொண்டிருப்பதும், அந்த வன்முறைகளால் பல்லாயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் பாதிக்கப் பட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.


ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் கலவரத்தை அடக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளையும் படுகொலைகளையும் நடத்தி வரும், மதவெறியர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப் படவேண்டும் என தமுமுக வலியுறுத்துகிறது.

Tuesday, July 1, 2008

பெண் தீவிரவாதிகளுக்கு பயிற்சி !!!





source:dravidamuslium

'சங்கரா டிவி': சேனல் தொடங்கும் காஞ்சி மடம்

காஞ்சி மடத்தின் சார்பில் புதிய தொலைக்காட்சி தொடங்கப்படவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த தொலைக்காட்சி சேவை தொடங்கப்படுகிறது.

சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கித் தவித்து வரும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துவங்கவுள்ள இந்த டிவியின் பெயர் சங்கரா டி.வி.

இதில் இந்து சமயம் குறித்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

காஞ்சி காமக்கோடி பீடம் டிரஸ்ட் சார்பில் தொடங்கப்படும் இந்த டிவிக்கான அலுவலகம், ஊழியர்கள், கருவிகள் எல்லாம் தயாராக உள்ளன.

இன்னும் 2 வாரங்களில் லைசென்ஸ் வந்து சேர்ந்துவிடும் எனத் தெரிகிறது இதையடுத்து 20 நாட்களுக்குள் சங்கரா டி.வி தனது ஒளிபரப்பை துவக்கும் என காஞ்சி மட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழினப் பகைவர்கள் யார்?


தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படக்கூடிய திட்டம், சேது சமுத்திரத் திட்டம். இத் திட்டம் அமுலானால் தூத்துக்குடியிலிருந்து கிழக்குக் கடற்கரையிலுள்ள துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தைச் சுற்றிக் கொண்டு 424 கடல் மைல் தூரம் கூடுதலாக பயணிக்க வேண்டிய அவசியமில்லை. இத்திட்டத்தினால் தமிழக கடலோர வாணிபமும், பன்னாட்டு வாணிபமும் செழிக்கும். தமிழர்களின் நூற்றாண்டு கனவுத் திட்டம் இது.இத்திட்டம் தொடங்கப்பட்டு 60 சதவீத பணிகள் முடிந்த பிறகு, பார்ப்பன சக்திகள் ‘ராமன்’ கட்டிய பாலம் என்று கூறி, புராணத்தைக் காட்டி, தமிழகத்தின் மிகப் பெரும் வளர்ச்சித் திட்டத்தை உச்சநீதிமன்றத்தின் வழியாக முடக்கி விட்டன.• சுப்பிரமணிய சாமி என்ற ஒற்றைப் பார்ப்பனர் வழக்கு தொடர்ந்தார்• ‘துக்ளக்’ சோ என்ற பார்ப்பனர் வழி மொழிகிறார்.• ஜெயலலிதா பார்ப்பனர், ‘ராமன்’ கட்டிய பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூப்பாடு போடுகிறார்.• இல.கணேசன், இராமகோபாலன் போன்ற பார்ப்பனர்கள் ராமன் பாலத்தை இடிப்பது ‘இந்து’ விரோதம் என்று கூப்பாடு போடுகிறார்கள்.• ராமாயணம் நடந்த கதையல்ல; அது ஆரியர்கள் திராவிடர்களை சூழ்ச்சிகரமாக வெற்றிக் கொள்வதை சித்தரிக்கும் கற்பனைக் கதை, என்ற உண்மையை நேரு, விவேகானந்தர் உட்படப் பல அறிஞர்கள் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.• எத்தனையோ ராமாயணங்கள் இருந்தும் பார்ப்பனர்கள் வால்மீகி ராமாயணத்தை மட்டும்பிடித்துக் கொண்டு தொங்குவது ஏன்?• அதுதான் சமஸ்கிருதத்தில் பார்ப்பனர்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி எழுதப்பட்டது - என்பதால் தான்.• பார்ப்பனர்கள் செய்வதற்கு மட்டுமே உரிமையுள்ள தவத்தை - சூத்திரன் செய்யக் கூடாது என்று கூறி சம்பூகன் என்ற சூத்திரன் தலையை வெட்டி எறிகிறான் ராமன்; பார்ப்பனர்களுக்காக ராமன் செய்த கொலையை, பார்ப்பனர்கள் மகிழ்ச்சிக் கூத்தாடி வரவேற்கிறார்கள், என்கிறது, வால்மீகி ராமாயணம்.• அனுமான் “பிராமண” வேடத்தில் இருந்தபோது அது அனுமான் என்று தெரிந்தும் அனுமான் காலில் விழுந்து வணங்குகிறான் ராமன். வேடம் தரித்த பார்ப்பனராக இருந்தாலும், காலில் விழுந்து வணங்குவதே தர்மம் என்கிறான் ராமன்.• இராவணனின் தங்கை சூர்ப்பனகை - லட்சுமணனிடம், தனது காதலை வெளிப்படுத்தியபோது, அந்தப் பெண்ணின் உறுப்புகளை சிதைத்து அவமதித்த லட்சுமணன், ‘நீ வேறு குலம்; நான்வேறு குலம்’ என்று குல தர்மம் பேசுகிறான்.• அரண்மனையிலிருந்து காட்டுக்குப் புறப்படும்போது, தனது உடைமைகளை எல்லாம் ராமன், பார்ப்பனர்களுக்கு மட்டுமே தானம் வழங்கினான், ஏழைகளுக்கு அல்ல.• காட்டில் தனது தம்பி பரதன் தன்னை சந்திக்க வந்தபோது, ‘பிராமணர்களுக்கு எந்த வருத்தமும் இல்லாமல் ஆட்சியை நடத்துகிறாயா’ என்று கவலையுடன் கேட்கிறான், ராமன்.• புத்தர்கள் திருடர்கள்; அவர்களிடம் எச்சரிக்கையாக இரு என்று, புத்த மார்க்கத்தை ஏற்ற திராவிடர்களைத் திருடர்கள் என்று தன்னை சந்திக்க வந்த தம்பி பரதனிடம் ராமன் கூறுகிறான்.வேத மதம் என்ற பார்ப்பன கொடுங்கோன்மையை எதிர்த்து புத்த மார்க்கம் வந்தது. புத்த மார்க்கத்தின் செல்வாக்கை வீழ்த்த எந்த தத்துவமும் இல்லாத ‘வேதங்கள்’ பயன்படாது என்று கருதிய பார்ப்பனர்கள், புராணங்களை உருவாக்கினார்கள். அதுதான் வால்மீகி ராமாயணம்.• வால்மீகியின் பிறப்பையே பார்ப்பனர்கள் ‘அற்புதமாக்கி’ விட்டார்கள். கடும் தவம் செய்த கிருஷ்ண மகரிஷியின் கண்களிலிருந்து வழிந்த வீரியத்தை பாம்பு ஒன்று விழுங்கியபோது அந்தப் பாம்பே கர்ப்பம் தரித்து, வால்மீகியாக பிறந்து ராமாயணத்தை எழுதியதாக கதை விட்டார்கள்.• வால்மீகி ராமாயணத்தை சி.ஆர்.சீனிவாச அய்யங்கார் என்ற பார்ப்பனர் மொழி பெயர்த்தார். இந்த மொழி பெயர்ப்பைத்தான் பார்ப்பனர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். அவர் “ராமாயணம் நடந்திருக்குமா என்ற கேள்விகளைக் கேட்கக் கூடாது. ஆரியர் கொள்கைப்படி நிகழ்வுகள் முக்கியமல்ல; அவர்களின் எண்ணங்கள்தான் முக்கியம்; ஆரியர்களின் எண்ணங்கள்தான் சரித்திரம்” என்று தனது முன்னுரையில் கூறுகிறார்.• முதல்வர் பதவியிலிருந்து விரட்டப்பட்ட ராஜகோபாலாச்சாரி - பதவி விலகியவுடன் ராமாயணத்துக்கு விரிவுரை எழுதத் தொடங்கியது இந்த காரணத்தால்தான். பார்ப்பனர்களுக்கு சோதனை வரும்போதெல்லாம் ராமாயணத்தை எடுத்துப் படியுங்கள் என்று பார்ப்பனர்களுக்கு உபதேசம் செய்தவர் ராஜகோபாலாச்சாரி.• இப்படி ராமாயணம் - பார்ப்பனர்களின் சட்ட நெறிகளை ‘சூத்திரர்’கள் பின்பற்றி வாழ வேண்டும் என்று பறைசாற்றுகிறது. அதனால்தான் பார்ப்பனர்கள் ‘ராமன்’ பிறந்த இடம் என்றும், ‘ராமன்’ பாலம் என்றும் ‘ராமனை’ விடாமல் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். இதன் நோக்கம் தமிழினத்தை மீண்டும், அடிமைப் படுகுழியில் மனுதர்ம சாக்கடைக்குள் வர்ணாஸ்ரம இருட்டுக்குள் திணிப்பதுதான்.தமிழர்களே, பார்ப்பனர் சூழ்ச்சிகளில் ஏமாறாதீர்!

Friday, June 27, 2008


இருபத்தோராம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலைகளை நிகழ்த்தி சாதனை(?) படைத்த நரேந்தி மோடி தனது மனிதகுல விரோதச் செயலை நிகழ்த்தி சாதனை படைத்தவர். விரல்விட்டு எண்ணக்கூடிய சில சக்தி களைத் தவிர அனைவராலும் வெறுக்கப்பட்ட அந்த மனிதர் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராக விஷத்தை கக்கியிருக்கிறார்.

தனது மாநிலத்துக்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வில்லை என மத்திய அரசை நோக்கி பாய்ந்து பிராண்டினார். மாநிலத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றால் மாநில முதலமைச்சர் பொதுவாக என்ன செய்வார்? பகிரங்கமாக வேண்டுகோள் விடுப்பார், தலைநகர் டெல்லிக்குச் செல்வார். பிரதமர், நிதியமைச்சர் மற்றும் திட்டக்கமிஷன் துணைத்தலைவர் முதலானோரை சந்திப்பார். தீட்டப்பட வேண்டிய திட்டங்களையும், அதற்குத் தேவையான நிதி குறித்தும் தங்களது கோரிக்கைகளை வைப்பார். இதுவே மாநில முதலமைச்சர்களின் நாகரீகமான நடைமுறை.

ஆனால் இதற்கெல்லாம் மாறாக நாற்சந்தியில் இருந்துகொணடு நாகரீக மற்ற முறையில் இந்திய இறையாண்மைக்கு விரோதமாகவும், தான் வகிக்கும் பதவிக்கு பொருத்தமில்லாத வகையிலும், தான் ஏற்றுக்கொண்ட ரகசிய காப்பு பிரமாணத்திற்கு விரோதமாகவும் பேசினார், அல்ல பிதற்றினார்.

மத்திய அரசு குஜராத் மாநில அரசுக்கு போதுமான நிதி கொடுக்காமல் புறக்கணிப்பதாகவும், மேலும் நிதி கொடுக்காவிட்டால் குஜராத் மாநிலத்திலிருந்து வரிகொடுக்க மாட்டோம் என்றும், மத்திய அரசின் உதவிகள் எங்களுக்குத் தேவையில்லை என்றும், மத்திய அரசின் உதவிகள் பெறாத மாநிலம் என குஜராத்தை அழைக்கட்டும் என்றும் அவர் அதிமேதாவித்தனமாக பேசியுள்ளார்.

மத்திய அரசுக்கு வரிகொடுக்க மாட்டோம் என்று கூறுவது அப்பட்டமான தேசதுரோகச் செயலாகும். நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக கூச்சலிடும் தீவிரவாதிகளின் கூற்றாகவே இது கருதப்படும். இந்திய அரசுக்கு வரிகொடுக்க மாட்டோம் என்றால் இவர் எந்த நாட்டிற்கு வரி செலுத்துவாராம்? இஸ்ரேலுக்கா? அமெரிக்காவுக்கா? நேபாளத்தில் விரட்டப்பட்ட மன்னருக்கா? அல்லது மடங்களுக்கா? என்ன ஒரு மடத்தனமான பேச்சு?

1960களில் காஷ்மீர் மக்களின் மனநிலையை அறிய அவர்களின் அரசியல் அபிலாஷையை அறிய பகிரங்க வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என கோரிக்கை விடுத்தார் காஷ்மீரிகளின் தலைவர் ஷேக் அப்துல்லாஹ். அப்படி யென்ன அவர் தவறாகப் பேசி விட்டார்? என்றே நடுநிலைவாதிகள் எண்ணினர். ஆனால் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி, இதற்காக ஓட்டெடுப்புவிடச் சொல்வதா? என்ற ஆத்திரத்தில் இந்திய அரசுக்கும் காஷ்மீர் சிங்கமான ஷேக் அப்துல்லாஹ்வுக்கும் விளைந்த விவகாரத்தில் ஷேக் அப்துல்லாஹ்வை கொடைக்கானலில் சிறைவைக்கும் அளவுக்கு நிலைமை தீவிரமடைந்தது.

மோடி தற்போது கூறியிருக்கும் விஷமக்கருத்து நிச்சயம் தேசத்துக்கு ஊறுவிளைவிக்கும் கருத்தாகவே இருக்கிறது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. மோடி கூறிய வெறிக்கருத்து குறித்து பாஜகவினர் யாரும் வாய் திறக்கவில்லை. இவர்கள் தான் தேசப்பற்று குறித்து பெரிதாக பீற்றிக் கொள்வார்கள். கீழே தள்ளிய கழுதை குழிபறித்த கதையாக தற்போது மீண்டும் உச்சக்கட்டமாக தனது உளறலை மோடி தொடர்ந்துள்ளார். நான் கூறியது தேசத்துரோக கருத்துதான் என்றால் என் மீது தேசத்துரோக வழக்கு தொடர முடியுமா? என மத்திய அரசை நோக்கி சவால் விடுத்தார். அதோடு ஒருநாளைக் கூட வீணாக்க வேண்டாம், இன்றே என்னை தூக்கில் போடுங்கள் என்று பகிரங்கமாக பொதுக் கூட்டத்தில் கூறியிருக்கிறார். அவர்கள் என்னை எப்படி தூக்கில் போடுவார்கள்? என்று நையாண்டி வேறு. அப்சல்குருவையே தூக்கில் போட முடியாதவர்கள் என்னையா தூக்கில் போடப் போகிறார்கள்? என்று கிண்டலடித்துள்ளார். மோடி எனும் பதறவைக்கும் பாதகனை இனப்படு கொலைகளின் காலத்திலேயே தண்டித் திருக்க வேண்டும். மலம் சுமப்பதை புண்ணியமாகக் கருதவேண்டும் என்று தனது துருப்பிடித்த நாவினால் கூறிய தைத் தொடர்ந்து நிரூபிப்பது போல் தலித் களை நுழையவிடாமல் விரட்டி யடித்த அவலக் கதைகளை சாதனை சரித்திர மாகக் கொண்டிருக்கும் மோடியை தண்டிக்க மத்திய அரசும், நீதித்துறையும் இனியும் தாமதித்தால் இந்திய ஹிட்லரின் ஆணவத்தை அடக்கமுடியாமல் போய்விடும். மத்திய அரசு தனது ஆண்மையை நிரூபிக்குமா?

source : tmmk

Monday, June 9, 2008

ராமர் பாலம்: ''ஒரு பிடி மண்ணை எடுத்தால் புனிதம் கெட்டுவிடுமா?''- நீதிபதிகள் கேள்வி


ராமர் பாலம் உள்ள இடத்திலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வேறு இடத்தில் வைத்தால் அதன் புனிதம் கெட்டு விடுமா என சேது திட்டத்துக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

25 கிலோ மீட்டர் நீளமான ஒன்று வழிபாட்டு தலமாக இருக்க முடியுமா? என்று ராமர் பாலம் பற்றிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூறியும் ராமர் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோரியும் இந்து முன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்கத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

அவர்களுடன் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் இதே கோரிக்கையுடன் தனித்தனி மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் மீது பல மாதங்களாக விசாரணை நடந்து வருகிறது. கடந்த மே-1ம் தேதி இறுதிக் கட்ட விசாரணை தொடங்கியது. இதை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன், நீதிபதி ஜே.எம்.பன்சால் ஆகியோர் நேற்று(மே-6) மீண்டும் விசாரித்தனர்.

அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சோலி சொராப்ஜி, கே.பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். சொராப்ஜி வாதிடுகையில்,

மக்கள் தாங்கள் கொண்டிருக்கும் மத நம்பிக்கையை தங்களது விருப்பப்படி தொடர்வதற்கும், பிரசாரம் செய்வதற்கும் உரிமை உண்டு. அவர்கள் கொண்டுள்ள எந்தவொரு நம்பிக்கையையும் தடுப்பது அரசியல் சட்டத்தின் 25-வது பிரிவை மீறுவதாகும்.

ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா? அது இயற்கையாக உருவானதா? என்பது இதில் முக்கியமல்ல. இந்திய சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்கள் ராமர் பாலம் ராம பிரானால் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் வழிபடும் பகுதியை அழிக்கவோ, இடிக்கவோ முயற்சிப்பது அவர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாகும்.

மேலும் ராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா, இல்லையா என்பதை நிரூபிக்க அறிவியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களை ஆராய்வது போன்ற பிரச்சினைகளில் நுழைவது உச்ச நீதிமன்றத்தில் வேலையல்ல என்றார்.

இந்து முன்னணி தலைவர் ராம. கோபாலன் சார்பில் வாதிட்ட பராசரன்,

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மக்களின் மனதில் ஏற்பட்ட காயத்தின் ஆழமான வடு இன்னும் உள்ளது. அந்தக் காயம் ஆறிவிட்டாலும் கூட வடு மறையவில்லை. அதேபோல் ராமர் பாலம் இடிக்கப்பட்டாலும் அது நிரந்தர வடுவை உருவாக்கும் என்றார்.

அப்போது நீதிபதி ரவீந்திரன், நீதிபதி பன்சால் ஆகியோர் குறுக்கிட்டு, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

நாம் பூமித் தாயை வணங்குகிறோம், அதற்காக பூமியை நாம் தொடக் கூடாது என்று அர்த்தமா?. நாம் இமயமலையைக் கூட வணங்குகிறோம். அதற்காக இமயமலையைத் தொடக் கூடாது என்று அர்த்தமாகி விடுமா?.. இதேபோல் மதுராவில் உள்ள கோவர்த்தன மலையை வழிபடுகிறோம். அதற்காக கோவர்த்தன மலையில் எதையுமே செய்யக் கூடாது என்று ஆகிவிடுமா?

மக்கள் புனிதமாகக் கருதுவதால் அங்கு கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ளக் கூடாதா?. 25 கிலோ மீட்டர் நீளமான ஒன்று (ஆதாம் பாலம்) வழிபாட்டு தலமாக இருக்க முடியுமா?.

ராமர் பாலம் உள்ள இடத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வேறு இடத்தில் வைத்தால் அதன் புனிதம் கெட்டு விடுமா? என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் தொடுத்தனர்.

இதற்கு பதிலளித்த பராசரன், இவையெல்லாம் பதில் அளிப்பதற்கு மிகக் கடுமையான கேள்விகள் ஆகும். இந்தக் கேள்விகளுக்கு நீதிபதிகள் கூட பதில் அளிப்பது சிரமம் என்றார்.

சோலி சொராப்ஜி கூறுகையில், மலைகள், நதிகள், மரங்கள் போன்ற உதாரணங்கள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ராமர் பாலம் பற்றியே கவலை கொள்கிறோம் என்றார்.

அப்போது, நாட்டின் வளர்ச்சிப் பணிக்காக 300 மீட்டர் நீள பகுதியை இடிக்க கூடாதா? என்பதை அறிய கோர்ட்டு விரும்புகிறது என நீதிபதிகள் கேட்டதற்கு, இடிக்கக் கூடாது என்று பதில் தந்தார் சொராப்ஜி.

பின்னர் பேசிய பராசரன், 6வது வழித் தடத்தில் அமைந்துள்ள ராமர் பாலத்திற்கு எந்த சேதமும் ஏற்படுத்தாமல் சேது சமுத்திர திட்டத்தை 4வது வழித் தடத்தில் செயல்படுத்த எங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்றார்.

இதையே சுப்பிரமணியம் சுவாமியும் வலியுறுத்தினார்.

அரசு வழக்கறிஞர் நாரிமன்:

ஆனால், மத்திய அரசின் மூத்த தலைமை வழக்கறிஞர் நாரிமன் வாதாடுகையில்,

4-வது மற்றும் 5-வது வழித் தடத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற இயலாது. சுற்றுப்பாதையில் அமைந்துள்ள அந்தப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு சரியான வசதியை ஏற்படுத்த முடியாது என்றார்.

இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் புதன்கிழமைக்கு (மே-7) ஒத்தி வைத்தனர்.


Thanks:Umar Mukthar

'குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் ஹிந்துத்துவ சதி'

பிரபல தலித் சிந்தனைவாதியும் "தலித் வாய்ஸ்" பத்திரிக்கையின் ஆசிரியருமான V.T. இராஜசேகர் அவர்கள், "நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் வெடிகுண்டு சம்பவங்களுக்குப் பின்னால் முஸ்லிம்களை மோசமானவர்களாகவும் தேச விரோதிகளாகவும் சித்தரிக்க ஹிந்துத்துவ இயக்கங்கள் நடத்தும் சதிகளே" என கூறினார். கேரளத்திலிருந்து வெளியாகும் "தேஜஸ்" என்ற தினசரிக்கு அவர் அளித்தப் பேட்டியின் பொழுது இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் நடைபெறும் குண்டு வெடிப்புகளைச் சாக்காகக் கொண்டு எண்ணற்ற முஸ்லிம் இளைஞர்கள் எவ்வித ஆதாரங்களும் இன்றி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுகின்றனர். ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டபின், வழக்குகள் தொடர்பாக அவர்கள் மீது எவ்வித மேல் விசாரணைகளும் நடைபெறுவது கிடையாது. இதற்குக் காரணம், சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக அவர்களின் விசாரணை நடத்த எவ்வித ஆதாரங்களும் இன்மையே காரணமாகும்.


இந்தியாவை உலுக்கிய பல்வேறு தீவிரவாதத் தாக்குதல் படுகொலை சம்பவங்ககளுக்குப் பின்னணியில் RSS நியமித்த காவல்துறையினரே செயல்பட்டுள்ளனர். ஆனால் ஒரு நாடகம் போன்று பின்னர் அவை அனைத்தும் முஸ்லிம்களின் மீதே சுமத்தப்பட்டன. பாராளுமன்றத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டது RSS-ஐத் தலைமையாகக் கொண்ட ஹிந்துத்துவவாதிகளின் சதியாலோசனை தான் என்பது தெளிவானதாகும். நாட்டில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் மேல் சாதியினர் என்று சொல்லிக் கொள்வோரின் விருப்பங்களையும் அவர்களுக்கு விளையும் நன்மைகளையும் கண்டுகொள்ள முடியும்.


நாட்டில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் பல வருடங்களாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதுக்குப் பின்னால் தீவிரவாதி என முத்திரைக் குத்துதல் மிகவும் சாதாரணமாக நடைபெறும் விஷயமாகும். ஆனால் அக்கைதுகளுக்குப் பிறகு அவர்கள் தீவிரவாதிகள் என்பதற்கு ஆதாரமான ஆவணங்கள் எதுவும் நீதிமன்றங்களில் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படுவது கிடையாது. மேல் விசாரணைகளோ ஜாமீனோ இவர்களுக்குக் கிடைப்பதில்லை. நீதிமன்றம் என்பது என்ன என்பதைக் கூட இவர்களில் பலர் இன்று மறந்து போய் விட்டனர். இளைஞர்களை மட்டுமே குறிவைத்து ஆயிரகணக்கானவர்களைச் சிறையிலடைத்தது மூலம், அரசு தெளிவான முஸ்லிம் இன அழிப்பில் ஈடுபடுகின்றது.


அப்துல் நாசர் மஹ்தனி குற்றம் சுமத்தப்பட்டு ஒன்பதரை வருடங்கள் கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்குத் தேவையான மருத்துவ உதவி செய்யக்கூட அரசு இயந்திரங்கள் தயாராகவில்லை. ஆனால், இறுதியில் அவர் மீது சுமத்தப்பட்ட அத்தகையக் கடுமையான குற்றங்களுக்கு ஒரு சிறு ஆதாரம் கூட சமர்ப்பிக்க இயலாமல் போனதால் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஒவ்வொரு குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இவரைப் போன்று ஆயிரக்கணக்கான மஹ்தனிகள் பலிகடாக்களாக ஆக்கப்படுகின்றனர்.


சாதி அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு மனித நேயத்திற்கெதிரான பல்வேறு கொடுமைகளை அரங்கேற்றிவரும் சனாதனமும் அதற்கு எதிராக இஸ்லாமும் எதிரிகளாக இன்று நிற்கின்றன. சனாதனம் சாதாரண மக்களை அநியாயமாக உறிஞ்சக்கூடியதாகும். ஆனால் அதே சமயம், இஸ்லாம் மனித முன்னேற்றத்திற்குத் தேவையான கொள்கைகளை முன் வைக்கக் கூடியதாகும்.


இன்றைய நாள்வரை இஸ்லாத்தை இல்லாமல் அழித்தொழிப்பதற்குப் மேல்சாதியினர் என்போர் தாழ்த்தப்பட்ட மக்களைத் தான் பயன்படுத்துகின்றனர். இருப்பினும் கால ஓட்டத்தில் ஒருநாள் இந்த மேல்சாதி சமூகத்தின் தந்திரங்களைத் தலித்களும் ஆதிவாசிகளும் நிச்சயமாகப் புரிந்துக் கொள்ளவே செய்வர்.


தலித்களையும் மத சிறுபான்மையினரையும் தங்களுக்குள் அடித்துக் கொள்ள வைக்க சனாதனம் அனைத்து வகைகளிலும் முயன்றாலும் இவைகளுக்கிடையிலான ஒற்றுமையில் யாதொரு குறைவும் ஏற்படவில்லை. இவர்கள் ஒற்றுமையுடன் வேலை செய்கின்றனர்; ஒற்றுமையுடனே வாழ்கின்றனர். பரஸ்பரம் அவநம்பிக்கையோ அல்லது தொட்டுப்பழகுவதிலோ எவ்விதப் பிரச்சனையும் இல்லை. கொல்கத்தாவில் மிக அதிகமாக முஸ்லிம்களே வாழ்கின்றனர். எனினும் அங்கு பல்வேறு ஜாதி மக்களுடன் முஸ்லிம்களுக்கு எவ்விதத் தீட்டுப் பிரச்சனையும் இல்லை.


இந்தியாவிற்கு வந்த முஹம்மத் கஜ்னவி, சோமநாதர் ஆலயத்தில் விஸ்வரூபம் எடுத்து நின்ற சமூகப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரவே அதனை அவர் தகர்த்தார். அக்காலத்தில் சோமநாதர் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான அபலைகள் 'தேவதாசிகள்' என்ற பெயரில் இருந்தனர். இதே போன்று ஆலயங்கள் என்ற பெயரில் மூடநம்பிக்கைகள் மற்றும் அநாச்சாரங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்த அநேக ஆயிரம் விபச்சாரக் கூடங்களை அவர் தகர்த்திருந்தால் அது அவருக்கு மிகப்பெரிய வெற்றியாகவே அமைந்திருக்கும்.


வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கப்போவதில்லை. எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவும் செய்யாது. மாநிலம், சாதி அடைப்படையிலான அமைப்புகளுக்கு அதிகாரம் உடைய புதிய அரசியல் கூட்டணிக்கே கேரளம் உட்பட இனி வரும்காலங்களில் முன்னேற்றம் இருக்கும். சமயச்சார்பற்ற கட்சிகள் நிர்ணயிக்கக் கூடிய அரசியல் இனி இந்தியாவில் உருவாகும்.


பாஜக, முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெளிப்படையாகத் தெரியும் எதிரி எனில், காங்கிரஸும் CPM-மும் மறைவான எதிரிகளாகும். மறைவான எதிரிகளே மோசமான எதிரிகளாவர். கேரளத்திலுள்ள பிரபலமான சிறுபான்மையினரான ஈழவ சமூகத்தை மார்க்ஸியமும் பிராமணீயம் என்ற சனாதனமும் ஹைஜாக் செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.